நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தவளக்குப்பம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணி, 66; நீரிழிவு நோயால் அவதிப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாத விரக்தியில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

