ADDED : ஆக 18, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
செஞ்சி அடுத்த பனபாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், 71; இவர் தனது அண்ணன் மகன் வீரபாண்டியன் என்பவருடன் நேற்று முன்தினம் மயிலம் கோவிலுக்கு செல்வதற்காக பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்று கொண்டிருந்தார்.
பத்துகண்ணு மெயின் ரோட்டில் சென்ற போது, ஸ்பீடு பிரேக்ரில் பைக் ஏறி இறங்கியபோது , மாயகிருஷ்ணன் கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த வரை உடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
வீரபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போக்குவரத்து போலீசார் (மேற்கு) வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
