sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நில மோசடி வழக்கில் தலைமறைவான மூதாட்டி 5 ஆண்டிற்கு பின் கைது

/

நில மோசடி வழக்கில் தலைமறைவான மூதாட்டி 5 ஆண்டிற்கு பின் கைது

நில மோசடி வழக்கில் தலைமறைவான மூதாட்டி 5 ஆண்டிற்கு பின் கைது

நில மோசடி வழக்கில் தலைமறைவான மூதாட்டி 5 ஆண்டிற்கு பின் கைது

1


ADDED : செப் 28, 2024 08:06 AM

Google News

ADDED : செப் 28, 2024 08:06 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஆள் மாறாட்டம் செய்து, நிலத்தை விற்று மோசடி செய்து தலைமறைவான மூதாட்டி, 5 ஆண்டிற்கு பின் போலீசார் கைது செய்தனர்.

பிரான்சில் வசிப்பவர் கமலேசன். இவர், தனது தாய் கமலாட்சினிக்கு சொந்தமாக புதுச்சேரியில் இருந்த 4 பிளாட்டுகள் ஆள் மாறாட்டம் செய்து விற்கப்பட்டது குறித்து கடந்த 2019ல் புகார் அளித்தார். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில், ஆள் மாறாட்டம் செய்து பிளாட்டுகளை விற்பனை செய்த மூதாட்டி சாந்தி,62; கடந்த 5 ஆண்டுகளாக முத்தியால்பேட்டை, சோலை நகரில் தலைமறைவாக வசித்து வருவதை கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளதால் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us