/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் கீதம் வெளியீட்டு விழா
/
தேர்தல் கீதம் வெளியீட்டு விழா
ADDED : மார் 18, 2026 04:57 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலகம் சிவிப் திட்டம் மற்றும் தலைமை தேர்தல் அலுவலகம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் தேர்தல் கீதம் வெளியீட்டு விழா கடற்கரை சாலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கலந்து கொண்டு புதுச்சேரி தேர்தல் கீதத்தை வெளியிட்டு நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி பேசினார்.தொடர்ந்து தேர்தல் கீதத்தை உருவாக்கிய குழுவினரை பாராட்டி கடந்த தேர்தலில் 82 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.
இந்த முறை 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டும் வகையில் அனைவரும் இணைந்து செயல்பட்டு, புதுச்சேரியை ஒரு முன்னோடி யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும்' என்றார். சிவிப் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாக்குரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

