ADDED : பிப் 01, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை காட்டாமணிகுப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், 35; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சிவகாமி மேரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், இவரது மனைவி சிவகாமி மேரி கருத்து வேறுபாடு காரணமாக, தனது தாய் வீடான தஞ்சாவூர் சென்று விட்டார்.
இதனால், மனமுடைந்த காணப்பட்ட ஆரோக்கியதாஸ், கடந்த 28ம் தேதி வீட்டில் துாக்குக் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைகண்ட அவரது தாய் சகாயமேரி, உறவினர்கள் உதவியுடன் ஆரோக்கியதாசை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ஆரோக்கியதாஸ் நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.