sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின்துறை அலுவலகம் முற்றுகை

/

மின்துறை அலுவலகம் முற்றுகை

மின்துறை அலுவலகம் முற்றுகை

மின்துறை அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூலை 04, 2025 02:20 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மின்துறை தலைவர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.

கூட்டு நடவடிக்கை குழு தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் தணிகாசலம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செந்தில்குமார், தணிகைவேலன், ரவிச்சந்திரன், முருகன், கண்ணன், தொழிற்சங்க பொறியாளர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், 5வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு நபர் குழு பரிந்துரையின் பேரில், மின்துறையில் உள்ள 13 பதவிகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட சம்பளத்திற்கான ஒப்புதலை, கவர்னரிடம் உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டன.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மின்துறை தலைவர் ராஜேஷ் சன்யால் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தங்களது கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us