ADDED : ஜன 29, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : நெஞ்சுவலியால் தனியார் நிதி நிறுவன ஊழியர் பரிதபமாக இறந்தார்.
லாஸ்பேட்டை, காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்குமார், 31; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் இருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு, திடீரென மயங்கி விழுந்தார். இவரை சக ஊழியர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சரண்யா கொடுத்த புகாரின் பேரில், தன்வந்திரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.