sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு; ரூ.1.12 கோடி இழந்த இன்ஜினியர்

/

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு; ரூ.1.12 கோடி இழந்த இன்ஜினியர்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு; ரூ.1.12 கோடி இழந்த இன்ஜினியர்

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு; ரூ.1.12 கோடி இழந்த இன்ஜினியர்


ADDED : மார் 21, 2025 04:48 AM

Google News

ADDED : மார் 21, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வெளிநாட்டில் வேலையும் இன்ஜினியர் போலி ஆன்லைன் வர்த்தகத்தில் 1.12 கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.

புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜ்மோகன். சீனாவில் உள்ள கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்தார்.

சொந்த ஊர் வந்த இவரை சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப்பில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான குழுவில் இணைந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் எவ்வாறு முதலீடு செய்யலாம் என வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதை நம்பிய ராஜ்குமார், பல்வேறு தவணைகளாக 1 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, ஏமாந்தார்.

பாகூரை சேர்ந்த நிவேதா என்பவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர் பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தே ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். இதைநம்பிய நிவேதா, 5 லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய் அனுப்பி ஏமாந்துள்ளார்.

இதேபோல், முருங்கப்பாக்கம் அபிஷா 83 ஆயிரத்து 500 ரூபாய், முத்திரையர்பாளையம் வெங்கடேஷ் 8 ஆயிரத்து 700, தியாகராஜ வீதி லட்சுமி 8 ஆயிரத்து 100, காரைக்கால் ஷாலினி 24 ஆயிரம், மூலக்குளம் முருகேசன், 7 ஆயிரத்து 500, நல்லவாடு மகாராஜா 6 ஆயிரத்து 500, ரெட்டியார்பாளையம் சாந்தி 8 ஆயிரத்து 600 ரூபாய் என 9 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 1 கோடியே 19 லட்சத்து 18 ஆயிரத்து 700 ரூபாய் ஏமாந்தனர். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us