/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொறியியல் கல்லுாரி மாணவர் தற்கொலை
/
பொறியியல் கல்லுாரி மாணவர் தற்கொலை
ADDED : அக் 25, 2025 07:56 AM
புதுச்சேரி: மொபைல் போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால், கல்லுாரி மாணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேல்ராம்பேட், திருப்பூர் குமரன் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திகேயன், 19; கிருமாம்பாக்கததில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவர், நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு நீண்டநேரம் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம்.
மேலும், அடிக்கடி மொபைல் போன் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணி வரை மொபைல் போன் பார்த்ததால், அவரது தந்தை கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த கார்த்திகேயன், அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

