/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எருகுலா பழங்குடியின மக்கள் வேட்டை கருவிகளுடன் ஆர்ப்பாட்டம்
/
எருகுலா பழங்குடியின மக்கள் வேட்டை கருவிகளுடன் ஆர்ப்பாட்டம்
எருகுலா பழங்குடியின மக்கள் வேட்டை கருவிகளுடன் ஆர்ப்பாட்டம்
எருகுலா பழங்குடியின மக்கள் வேட்டை கருவிகளுடன் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 21, 2025 06:17 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில எருகுலா பழங்குடியினர் மக்கள் நலச்சங்கம் சார்பில், வேட்டை கருவிகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகே நடந்தது.
பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். எருகுலா மக்கள் நலச்சங்க தலைவர் ரவி முன்னிலை வகித்தார். பழங்குடி விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் வரவேற்றார்.
இதில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் புருஷோத்தமன், இளங்கோவன், ஜெயபால், காய்த்ரிஸ்ரீகாந்த், தன்ராமன், பாக்கியலட்சுமி, ஆதவன், சக்திவேல், அழகப்பன், தனபால், நித்தியானந்தம், வீரமோகன், சுரேஷ், அழகர், சுவாமிநாதன், தீனா, பஷீர்அகமது, பிரகாஷ், பிராங்களின் பிரான்சுவா உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநிலத்தில் பூர்வகுடிகளாக உள்ள எருகுலா, மலக்குறவன், காட்டுநாயக்கன், குருமன்ஸ் ஆகிய பழங்குடியின மக்களை மத்திய அரசு அட்டவணை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, வலியுறுத்தி போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பழங்குடியின மக்கள் வேட்டை ஆயுதங்களான வில், அம்பு, கவண் போன்ற பொருட்களுடன் பங்கேற்றனர்.