sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காலாவதி மதுபானங்களை அழிக்க கலால் துறை உத்தரவு

/

காலாவதி மதுபானங்களை அழிக்க கலால் துறை உத்தரவு

காலாவதி மதுபானங்களை அழிக்க கலால் துறை உத்தரவு

காலாவதி மதுபானங்களை அழிக்க கலால் துறை உத்தரவு


ADDED : ஜூலை 21, 2025 06:43 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி மதுபான கடைகளில் காலாவதியான மதுபானங்களை அழிக்க வேண்டும் என, கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் மொத்தம், சில்லரை என, 534 மதுபான கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், இந்த மதுபான கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலால் துறைக்கு தொடர்ந்து புகார் வந்தன. குறிப்பாக, பீர் வகைகள் காலாவதியான பிறகு விற்கபடுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், உரிமம் பெற்ற வளாகத்திற்குள் காலாவதியான மதுபானங்கள் சேமிக்கப்பட கூடாது.

காலாவதியான மதுபானங்களை உரிமையாளர்கள் கண்டறிந்து பிரித்து கலால்துறை சட்டபடி அழிக்க வேண்டும். மீறினால் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us