ADDED : பிப் 10, 2026 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து மாற்று திறனாளிகள் மறுவாழ்வு இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள் ளனர்.
கடந்த 7ம் தேதி பாரதி பூங்காவில் நடந்த மாநில செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தலைவராக கார்த்திகேயன், துணைத் தலைவர்களாக குமார், ராணி, செயலாளர் குருதேவ், துணை செயலாளர்கள் செந்தில், சரஸ்வதி, பொருளாளர் கிஷோர்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சரவணக்குமார், மணிகண்டன், அன்பழகன், வீரராஜேந்திரகுமார், விஜயலட்சுமி, முத்துநாராயணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

