/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் வேகமாக பரவும் போலி எஸ்.பி.ஐ., வங்கி 'லிங்க்'
/
புதுச்சேரியில் வேகமாக பரவும் போலி எஸ்.பி.ஐ., வங்கி 'லிங்க்'
புதுச்சேரியில் வேகமாக பரவும் போலி எஸ்.பி.ஐ., வங்கி 'லிங்க்'
புதுச்சேரியில் வேகமாக பரவும் போலி எஸ்.பி.ஐ., வங்கி 'லிங்க்'
ADDED : டிச 30, 2024 11:35 PM

புதுச்சேரி: 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி பெயரில் போலியாக உலாவும், 'வாட்ஸாப் லிங்'கை தொட்டால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும்' என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரியில் வாட்ஸாப் குழுக்களுக்கு எஸ்.பி.ஐ., வங்கி பெயரில், இணையதள லிங்க் பரவி வருகிறது.
அதில், 'உங்கள் வங்கி கணக்கில் 7,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. லிங்கை திறந்து பெற்றுக் கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ., பரிசு புள்ளிகளை பணமாக்கி கொள்ளுங்கள்.
உங்கள் ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைத்துக் கொள்ளுங்கள்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
லிங்கை தொட்டு, அந்த பைலை திறந்ததும், வாட்ஸாப் குழுக்களின் ஐகான்கள் மற்றும் பெயர்கள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என மாறி விடுகின்றன.
அடுத்த சில நிமிடங்களில், நாம் எந்தெந்த வாட்ஸாப் குழுக்களில் இணைந்து உள்ளோமோ அந்த குழுக்களுக்கும் அந்த லிங்க் பரவுகிறது. அந்த குழுவில் இருக்கும் யாராவது அந்த பைலை திறந்தால், அடுத்து வேறு குழுக்களுக்கும் இதேபோல் பரவி விடுகிறது.
மோசடியான இந்த எஸ்.பி.ஐ., பைலை திறக்க வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
இந்த பைலை திறந்ததும் வங்கி விவரங்களை பதிவிட்ட பின், அவர்கள் தங்கள் மொபைலில் அனுப்பப்படும் ஓ.டி.பி.,யை பதிவு செய்ய இரு முறை நுழைய கேட்டுக்கொள்ளப்படுவர்.
இந்த ஓ.டி.பி., பரிவர்த்தனையை தெரிந்து கொள்ளும் சைபர் கும்பல், உங்களது வங்கி கணக்கில் அனுமதியில்லாமல் நிதியை மாற்றவோ அல்லது பிற மோசடி நடவடிக்கைகளைச் செய்யவோ முடியும்.
வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோய் விடும். எனவே சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். தெரியாத தொடர்புகளில் இருந்து ஏ.பி.கே. கோப்புகளை டவுன்லோடு செய்ய வேண்டாம். www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகாரளிக்கலாம்.
இவ்வாறு கூறினர்.