ADDED : பிப் 23, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோரிமேடு, காமராஜர் நகர், குறிஞ்சி வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 75. இவர் காலில் அடிப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக, தனது மகனிடம் கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மகன் ரகுநாதன் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர்.