தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : ஆக 27, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2025 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வியாபாரத்தில் நஷ்டம், மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை என, மன உளைச்சலில், பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பழனி மனைவி காமாட்சி, 50. பழனி கடந்த 2020ம் ஆண்டு இறந்த நிலையில், காமாட்சி, உடையார் தோட்டத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால்,பணம் இல்லாமல் கடையை நடத்த முடியாமல் அவதிப்பட்டார்.

தனது மகளுக்கு திருமணம் செய்ய முடியாமல், இருந்ததால், மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு மொட்டை மாடியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us