ADDED : ஜூன் 04, 2026 09:37 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேலன் மனைவி செல்வி, 55. இவர் கடந்த மார்ச் மாதம் தனது வீட்டில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தார். தனியார் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்தார்.
இந்நிலையில், அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். அங்கு அருகில் இருந்த மரத்தில் நேற்று துாக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டனர். புகாரின்பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
