sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொதுப்பணித்துறையில் கோப்புகள் திருட்டு; வவுச்சர் பெண் ஊழியர் கைது

/

பொதுப்பணித்துறையில் கோப்புகள் திருட்டு; வவுச்சர் பெண் ஊழியர் கைது

பொதுப்பணித்துறையில் கோப்புகள் திருட்டு; வவுச்சர் பெண் ஊழியர் கைது

பொதுப்பணித்துறையில் கோப்புகள் திருட்டு; வவுச்சர் பெண் ஊழியர் கைது


ADDED : டிச 16, 2024 05:09 AM

Google News

ADDED : டிச 16, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் கோப்புகளை திருடிச் சென்ற வவுச்சர் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி லெபர்தனே வீதியில், பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, 15 ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் மற்றும் 3 கோப்புகள் கடந்த 5ம் தேதி திடீரென அலுவலகத்தில் இருந்து மாயமானது.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் கருணாகரன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதே அலுவலகத்தில் வவுச்சர் ஊழியராக பணியாற்றும், சந்தாசாகிப் வீதியைச் சேர்ந்த கண்மணி, 50; என்பவர் சர்வீஸ் புத்தகங்களை திருடியது தெரியவந்தது.

விசாரணையில், தன் மீது நடக்கும் துறை ரீதியான விசாரணையில் இருந்து தப்பிக்க சர்வீஸ் புத்தகங்கள் அனைத்தையும் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us