ADDED : ஜன 29, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கிருஷ்ணா நகரில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி, கிருஷ்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு காலிமனையில் கிடந்த குப்பைகள் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவம் புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீனியர் தீயணைப்பாளர் செல்வக்குமார் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.