நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் மின்கசிவு காரணமாக கரும்புத்தோட்டம் தீப்பிடித்து எரிந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு பண்டசோழநல்லுார் பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் மின்கசிவு காரணமாக இவரது கரும்புதோட்டம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

