sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில் மூழ்கிய டிரைவர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

/

ஆற்றில் மூழ்கிய டிரைவர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

ஆற்றில் மூழ்கிய டிரைவர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

ஆற்றில் மூழ்கிய டிரைவர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


ADDED : ஏப் 22, 2025 04:31 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் அருகே ஆற்றில் மூழ்கிய டிரைவர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். .

வில்லியனுார் அடுத்த மேட்டுப்பாளையம் சாணாரப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அன்புசெல்வன்,33; இவர் நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்தநத்தம் மங்களபுரி நகர் பகுதியில் செல்லும் சங்கராபரணி ஆற்றங்கரையில் குளிர்ந்தனர். அப்போது அன்புசெல்வன் ஆற்றில் நீச்சல் அடித்தவாறு அக்கரை பகுதிக்கு சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கி மாயமானார்.

அவருடன் சென்றவர்கள் உடன் வில்லியனுார் தீயணைப்பு துறை மற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வில்லியனூர் தீயணைப்பு வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் போட் மூலம் தேடினர்.

வில்லியனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் தலைமையிலான போலீசார், மீனவர்களை அழைத்து மீன் பிடி பைபர் படகு கொண்டுவந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பின் இரண்டாவது நளாக நேற்று காலை 6:30 மணியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மீண்டும் தேடுதல் பணயில் ஈடுபட்டனர். இந்நிலையில் காலை 8:45 மணியளவில் அன்புசெல்வம் உடல் மீட்டனர். பின்அன்புச்செல்வன் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us