sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தடையை மீறி கடலுக்கு சென்றால் நலத்திட்ட உதவிகள் நிறுத்தம் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

/

தடையை மீறி கடலுக்கு சென்றால் நலத்திட்ட உதவிகள் நிறுத்தம் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

தடையை மீறி கடலுக்கு சென்றால் நலத்திட்ட உதவிகள் நிறுத்தம் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

தடையை மீறி கடலுக்கு சென்றால் நலத்திட்ட உதவிகள் நிறுத்தம் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை


ADDED : அக் 17, 2024 04:42 AM

Google News

ADDED : அக் 17, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் தடையை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மீன்வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கனமழை எச்சரிக்கை காரணமாக, கடலுக்குள் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலுக்குள் சென்றவர்கள் உடனடியாக திரும்ப வேண்டும் என மீனவளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இதையேற்று நேற்று முன்தினம் முதல் பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பினர். மேலும், 3வது நாளாக நேற்றும் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஏற்கனவே, கடலுக்கு சென்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் கரை திரும்பினர். இதனால் புதுச்சேரியில் அனைத்து படகுகளும், பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலர் மீன் பிடிக்க ஆழ் கடலுக்கு சென்று இருப்பதாக மீன்வளத் துறைக்கு புகார் வந்துள்ளது. ஆகையால், தடையை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us