/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயரும் கவர்னர் கைலாஷ்நாதன் உறுதி
/
மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயரும் கவர்னர் கைலாஷ்நாதன் உறுதி
மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயரும் கவர்னர் கைலாஷ்நாதன் உறுதி
மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் மீனவ மக்களின் வாழ்வாதாரம் உயரும் கவர்னர் கைலாஷ்நாதன் உறுதி
ADDED : ஏப் 16, 2025 10:24 PM
புதுச்சேரி: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம், மீன்வளத்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்தும் என கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் துவக்க விழாவில், அவர் பேசியதாவது:
புதுச்சேரியில், மீன்வளத்தையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இஸ்ரோ நிறுவனத்தின் உதவியோடு செயற்கைகோள் தகவல்களின் அடிப்படையில் மீன் வளம் அதிகம் இருக்கும் இடங்களை கண்டறிவது, மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை அறிந்து கொள்வது போன்ற வசதிகளை புதுச்சேரி மீனவர்களுக்கு ஏற்படுத்தி தர ஆலோசித்து வருகிறோம்.மீனவ சமுதாய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டப் பணிகள் மீன்வளத் துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்.
தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்தும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும், வாழ்வாதாரத்தை பலப்படுத்தும்,கடலோர கிராமங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும்.
மேலும் காலநிலை மாற்றத்தை தாங்கும் படியான வீடுகள், கட்டடங்களை கட்டித் தருவதற்கான முயற்சியை அரசுஎடுத்து வருகிறது.
பாரம்பரிய மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க கடல்பாசி மற்றும் கடல் கூண்டு மீன்வளர்ப்பு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. மீன் இறங்கு தளம் அமைக்கப்படுகிறது.
விலை அதிகமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள், புதுச்சேரி மீனவர்களுக்கு குறைந்த விலையில் கிடைபதற்கு தேவையான மானியம் தர வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டேன்.
இந்த கோரிக்கையை ஏற்று தற்போது தரப்படும் 60 சதவீத மானியத்தை உயர்த்தி தர மத்திய அரசு சம்மதித்து இருக்கிறது என்றார்.