ADDED : பிப் 25, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: கடலில் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் மீனவர் படுகாயத்துடன் தப்பினார்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு வடக்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ், 28; மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்,32, உட்பட 5 பேர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, பலத்த காற்று அடித்ததால், ராட்சத அலை ஏற்பட்டு படகு கவிழ்ந்தது. அதில் சதீஷ் படுகாயமடைந்தார். இவருடன் சென்ற மீனவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து, கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

