sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீன் பிடி படகுகள் கணக்கெடுப்பு பணி

/

மீன் பிடி படகுகள் கணக்கெடுப்பு பணி

மீன் பிடி படகுகள் கணக்கெடுப்பு பணி

மீன் பிடி படகுகள் கணக்கெடுப்பு பணி


ADDED : மே 01, 2025 04:46 AM

Google News

ADDED : மே 01, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி படகுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

மத்திய மீன்வளத்துறை அமைச்சகம், மீன்பிடி படகுகளை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார், மக்கள் குழு, கோவில் நிர்வாக குழு, பைபர் படகு உரிமையாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன், இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகு, கட்டு மரம் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. மீன் வளத்துறை அதிகாரிகள் படகுகளை கணக்கெடுப்பு செய்யும் பணியை நடத்தினர்.

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் கடந்த ஆண்டு 6 ஆயிரத்து 457 படகுகள் பதிவாகியிருந்தது. இந்த படகுகள் மீன் பிடியில் ஈடுபடுத்தப்படுகிறதா? என கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. புதிதாக படகுகள் சேர்க்கும் பணியும் நடக்கிறது. இவை அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

கணக்கெடுப்பால் மீனவர்களுக்கான உதவிகள் முறையாக சேரும். புதுச்சேரியில் 17, மாகேவில் 4, ஏனாமில் 8 மீனவ கிராமத்தில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் காரைக்காலில் கணக்கெடுப்பு பணி துவங்குகிறது. கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்தவும், எல்லை தாண்டி படகுகள் செல்வதை தடுக்கவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us