/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்பிடி வலை வழங்கும் நிகழ்ச்சி
/
மீன்பிடி வலை வழங்கும் நிகழ்ச்சி
ADDED : ஜன 27, 2025 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதி மீனவர்களுக்கு முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ., நந்தா சரவணன் மீன்பிடி வலைககளை வழங்கினார்.
முத்தியால்பேட்டை சோலை நகர் (தெற்கு) பகுதியைச் சேர்ந்த 32 மீனவர்களுக்கு மீன்பிடி வலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., நந்தா சரவணன் கலந்து கொண்டு தொகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடி வலையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தொகுதி தி.மு.க. செயலாளர் சவுரிராஜன், அவைத் தலைவர் எழிலன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் தங்கராசு, முன்னாள் தொகுதி மீனவர் அணி துணை செயலாளர் பூபதி, தேசப்பன், உதயகுமார், விநாயகமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

