sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இந்திய உணவுக் கழக சேமிப்பு குடோனில் இருந்து 450 அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்திய 5 பேர் கைது

/

இந்திய உணவுக் கழக சேமிப்பு குடோனில் இருந்து 450 அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்திய 5 பேர் கைது

இந்திய உணவுக் கழக சேமிப்பு குடோனில் இருந்து 450 அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்திய 5 பேர் கைது

இந்திய உணவுக் கழக சேமிப்பு குடோனில் இருந்து 450 அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்திய 5 பேர் கைது


ADDED : ஜன 30, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 30, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: இந்திய உணவுக் கழக சேமிப்பு குடோனில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்புடைய 450 அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்திய வழக்கில் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் அலுவலர்கள் 3 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, திருவாண்டார் கோவிலில் இந்திய உணவுக் கழக சேமிப்பு குடோன் உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அதிகாரிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை தணிக்கை மேற்கொண்டு வந்தனர். மூட்டைகளை எண்ணி ஆய்வு செய்ய வசதியாக குடோன்களில் இருந்த அரிசி மூட்டைகள் உள்பட அனைத்து உணவுப் பொருட்கள் மூட்டைகளையும் லாரிகளில் ஏற்றி வேறு இடத்தில் வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அரிசி மூட்டைகளை கடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 23ம் தேதி லாரியில் (டி.என்.30 ஏஏ 4200) ஏற்றப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்புடைய 450 அரிசி மூட்டைகளை கடத்திச் சென்றனர்.

26ம் தேதி மேற்கொண்ட ஆய்வின் போது ஏற்கனவே ஸ்டாக் வைக்கப்பட்ட அரிசி மூட்டைகளின் எண்ணிக்கை குறைவது தெரிய வந்தது.

இது குறித்து இந்திய உணவுக் கழக மண்டல அதிகாரி திருபுவனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து புதுச்சேரி மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி., வம்சிதரெட்டி மேற்பார்வையில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் (பொ) ஆகியோர் வழக்கு பதிந்து, விசாரித்தனர்.

அதில், திருவண்டார்கோவில் இந்திய உணவுக் கழகத்தில் குடோன் மேலாளர்களாக பணியாற்றி வரும் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் குணாளன், 34; பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில்குமார், 41; வில்லியனுார் கோகுல்ராஜ், 33; கண்டமங்கலம் லாரி உரிமையாளர் ஜெயசீலன், 44, சின்னபாபுசமுத்திரம் லாரி டிரைவர் மருதுபாண்டி, 35, ஆகியோர் 450 அரிசி மூட்டைகளை லாரியுடன் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அரிசி முட்டைகளை கடத்தியதை ஒப்புக்கொண்டனர். கடத்தல் கும்பல் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் லாரி உரிமையாளர் ஜெயசீலன் டிரைவர் மருதுபாண்டி ஆகியோர் புதுச்சேரி ஏம்பலத்தில் உள்ள செவன் ஸ்டார் ரைஸ் மில் வளாகத்தில் பதுக்கி வைத்திருந்த கடத்தப்பட்ட லாரியை அடையாளம் காட்டினர்.

அதையடுத்து போலீசார் 450 அரிசி மூட்டைகளுடன் கடத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவர்களை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு உணவு கடத்தல் கும்பலுடன் தொடர்பு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், போலீசார் சிறையில் அடைக்கப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us