
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் பிரபுதாஸ், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
புதுச்சேரி மாசி மகம் கடல் தீர்த்தவாரியை முன்னிட்டு மோடி மக்கள் சேவை மையம் சார்பில், 28ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளரும், மோடி மக்கள் சேவை மைய நிறுவனருமான பிரபுதாஸ் அறுசுவை அன்னதானம் வழங்கினார். இதில், பா.ஜ., முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.