sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சட்டசபை தேர்தல் பணியில் மாஜி முதல்வர் தீவிரம் ஆதரவாளர்கள் உற்சாகம்

/

சட்டசபை தேர்தல் பணியில் மாஜி முதல்வர் தீவிரம் ஆதரவாளர்கள் உற்சாகம்

சட்டசபை தேர்தல் பணியில் மாஜி முதல்வர் தீவிரம் ஆதரவாளர்கள் உற்சாகம்

சட்டசபை தேர்தல் பணியில் மாஜி முதல்வர் தீவிரம் ஆதரவாளர்கள் உற்சாகம்


ADDED : ஜன 12, 2025 06:21 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலை குறி வைத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் முன்கள பணியை துவங்கியுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாகியுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு காங்- திமுக கூட்டணியில் புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி பதவியேற்று 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆட்சியில் இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இவரது ஆட்சி கவிழ்ந்ததால் ஐந்து ஆண்டுகள் முற்று பெறாமல் ஆட்சி காலம் முடிவடைந்தது.

அடுத்து நடந்த 2021 தேர்தலில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிடாமல் தேர்தல் பணியாற்றினார்.இந்த தேர்தலில், மாகே மற்றும் லாஸ்பேட்டை இரண்டு தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வென்றது. கூட்டணியில் போட்டியிட்ட தி.மு.க., ஆறு இடங்களில் வெற்றி பெற்று சிவா எதிர்க்கட்சித் தலைவரானார்.

இந்த காங்., கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ்- பாஜ., கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி பதவியில் இருந்து வருகிறார். காங்., தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாராயணசாமி மீது சுமத்தப்பட்டதால் நாராயணசாமி இதற்கு பதில் கூறாமல் அமைதி காத்து வந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்., ஆட்சி கட்டிலில் அமர்த்த நாராயணசாமி தீவிர தேர்தல் பணியை தற்போதே துவக்கி உள்ளார்.

இதில், காங்.,தலைவர் வைத்திலிங்கம் வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார். காரைக்காலில் ஏ.வி. சுப்பிரமணியன், கமலக்கண்ணன் ஆகியோர் தேர்தல் முன்கள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று நாராயணசாமி தனக்கு ஆதரவாக கருதும் ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.

மேலும், இளைஞர்களை குறி வைத்து நாராயணசாமியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேஜ்களில் நாராயணசாமி தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வரும் தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டு வென்று காட்ட மீண்டும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us