ADDED : பிப் 07, 2026 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம், 65; கல்வெட்டு மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா, 60; தமிழக உள்ளாட்சிதுறையில் வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஜமுனா கடந்த 5 ஆண்டுகளாக மனநல வியாதிக்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் துாக் குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.

