sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாஜி அமைச்சர் கவர்னரிடம் மனு

/

சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாஜி அமைச்சர் கவர்னரிடம் மனு

சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாஜி அமைச்சர் கவர்னரிடம் மனு

சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாஜி அமைச்சர் கவர்னரிடம் மனு


ADDED : நவ 06, 2025 05:36 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காங்., கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கவர்னரிடம், மாஜி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கடிதம் கொடுத்துள்ளார்.

காங்., தலைவர் வைத்திலிங்கத்திற்கும், முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஒருவரை, ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஏனாம் காங்., நிர்வாகிகள் நேற்று முன்தினம், கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். அதில், ஏனாம் மக்களுக்கு மழை நிவாரணமாக, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோரியிருந்தனர்.

இதற்கு பதிலடியாக மல்லாடி கிருஷ்ணாராவ், கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளார்.

அதில், சுகாதாரத்துறையில் கண்டறியப்பட்ட சில பிரச்னைகள் குறித்து, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

எனது வாழ்வில், பல பதவிகளை வகித்துள்ளேன். கடமையை, வெளிப்படை தன்மையுடன் நேர்மையாக செய்துள்ளேன். பதவிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதில்லை.

எனவே, டில்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து என்னை நீக்கி, என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில், கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us