sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

/

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்


ADDED : டிச 28, 2024 05:54 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார மேதையாக மட்டுமில்லாமல், இந்தியாவின் நிதித்துறை செயலராகவும், உலக வங்கியின் தலைவராகவும் இருந்தவர்.

நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது,அவர் நிதி அமைச்சராக இருந்தார். அதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்தார்.

நம் நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச அளவில் உயர்த்தி, வெளிநாட்டு மூலதனத்தை கொண்டு வந்து, இந்தியா வல்லரசாக முக்கிய காரணமாக இருந்தார்.

அமைச்சர் திருமுருகன்: சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார மேதையாகவும் விளங்கியவர். தலைமை பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி கவர்னர், திட்டக்குழுவின் தலைவர், நிதி அமைச்சர், மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவர், இந்திய பிரதமர் என, அனைத்து துறைகளிலும் தன் பரிமாணத்தை உணர்த்தியவர்.

தன் ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்.சீரிய தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியவர்.

வைத்திலிங்கம் எம்.பி.,: அவர் பிரதமராக இருந்தபோது, நாட்டில் நிலையான வளர்ச்சியை கண்ட கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்ட காலகட்டமாக திகழ்ந்தது.

உலகமே பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்தபோது, இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்ல பல சீர்திருத்தங்கள் செய்தவர்.தனது பதவிக்காலத்தில், புதுச்சேரிக்கு வந்து தங்கி, இம்மாநிலம் வளர்ச்சி பெறுவதற்கான, வழிவகைகளை ஆய்வு செய்தவர். அவருடைய மறைவு அனைத்து நிலை மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு.






      Dinamalar
      Follow us