ADDED : நவ 19, 2025 07:58 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு முன்னாள் சபாநாயகர் தார்பாய் வழங்கினார்.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் லாஸ்பேட்டை தொகுதியில் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு தார்பாய், 5 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு ஆகியவற்றை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதிச் சேர்ந்த என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
