/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன் மழலையருக்கான பழங்கள் தின நிகழ்ச்சி
/
முன் மழலையருக்கான பழங்கள் தின நிகழ்ச்சி
ADDED : ஜன 13, 2025 05:17 AM

புதுச்சேரி : முத்தரையர்பாளையம் அருட்செல்வி ஆயி அரசு நடுநிலைப்பள்ளியில் முன் மழலையருக்கான பழங்கள் தின நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியர் சதீஷ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பாஸ்கரராசு தலைமை தாங்கி, பழங்கள் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார். ஆசிரியர்கள் சரோஜா, சிவமதி, செந்தில், சின்னராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் பழங்கள் போன்று உடை அணிந்தும், பெற்றோர் பழங்களை கொண்டு பல வகை உணவு பொருட்களை தயார் செய்து, காட்சிப்படுத்தினர்.
மேலும் பழங்கள் நிறைந்த செல்பி கார்னர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டது. அதில் பெற்றோர், தங்களது குழந்தைகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.