/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணா அறிவாலயத்தில் காந்தி விருப்ப மனு
/
அண்ணா அறிவாலயத்தில் காந்தி விருப்ப மனு
ADDED : மார் 06, 2026 04:18 AM

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதிப் பொறுப்பாளரும், தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினருமான காந்தி, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார். வரும் தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, முறைப்படி மனுவை அளித்தார்.
இந்த நிகழ்வின் போது, இந்திரா நகர் தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் கோதண்டராமன் முன்னிலை வகித்தார். தொகுதியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர்.

