ADDED : பிப் 18, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குடியிருப்பு பாளையம் வலம்புரி விநாயகர் கோவிலில், மூன்றாம் ஆண்டு நிறைவு வருஷாபிஷேகம் இன்று நடக்கிறது.
பாகூர் அடுத்த குடியிருப்பு பாளையத்தில் வரசித்தி வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மூன்றாம் ஆண்டு நிறைவு விழா வருஷாபிஷேகம் இன்று (18 ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, மாலை 5:30 மணிக்கு மங்களவாத்தியம், 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, சுத்து புண்ணியகவாசனம், 108 சங்குஸ்தாபனம், கலசபூஜை, 108 ஷன்னவதி திரவ்யா ஹோமம், பூர்ணஹூதி, தீபாராதனை நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உள் புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.