
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நேற்று நடந்தது.
வில்லியனுார் பெருந்தேவித் தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலில் 21ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 1ம் தேதி துவங்கி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இதில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபி ேஷகம் ,சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
நேற்று கருட சேவை உற்சவம் நடந்தது. முன்னதாக காலை பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், மாலை கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தார்.