ADDED : ஜன 25, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மணவெளி கிராம பஞ்சாயத்து, மகளிர் கூட்டமைப்பு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலின விழிப்புணர்வு ஏற்படுத்தி, 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலம் சென்றனர். மணவெளி முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், மகளிர் கூட்டமைப்பை சேர்ந்த சத்யா, விஜயலட்சுமி, தவமணி, கலையரசி, மலர்க்கொடி, பஞ்சாயத்து தலைவர் மீரா உட்பட வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

