நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சேதராப்பட்டில் பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேதராப்பட்டு புது காலனி, நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மனைவி நர்மதா, 42; கடந்த 6ம் தேதி, வேலைக்கு வெளியூர் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.