ADDED : நவ 18, 2024 08:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் ; மடுகரை ராமமூர்த்தி அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.
தலைமையாசிரியர் ஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி மாணவர்களின் தனிப்பாடல், குழுநடனம், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துவதால் மாணவர்களின் திறன் ஆக்கப்படுகிறதா, அழிக்கப்படுகிறதா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
பின் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் வழங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

