UPDATED : ஆக 20, 2026 11:24 PM
ADDED : ஆக 20, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்:ஒலக்கூர் அருகே தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுமி, அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், நேற்று தனது மகள் ரட்சிதா, 8; வை பைக்கில் அழைத்துக்கொண்டு, திண்டிவனத்தில் இருந்து மங்களம் நோக்கி சென்றார். ஒலக்கூர் அருகே சென்றபோது, அரசு பஸ் மோதியதில், பைக்கில் அமர்ந்திருந்த சிறுமி கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி காயமடைந்து, உயிரிழந்தார்.
ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இறந்த ரட்சிதா மங்களம் அரசு தொடக்க பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.
