/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அகல் விளக்கு தீயில் சிக்கி சிறுமி பலி
/
அகல் விளக்கு தீயில் சிக்கி சிறுமி பலி
ADDED : டிச 21, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வீட்டில் ஏற்றிய அகல் விளக்கு தீயில் சிக்கிய சிறுமி பரிதாபமாக இறந்தார்.
முதலியார்பேட்டை, தேங்காய்திட்டு, நேரு நகரைச் சேர்ந்தவர் சந்திரகுப்தன். இவரது மகள் தனீஷா, 8. இவர் கடந்த 14ம் தேதி மாலை கார்த்திகை தீபத்தன்று வீட்டில் அகல் விளக்கு ஏற்றினார். அப்போது அவரது துணியில் தீப்பிடித்து எரிந்தது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

