ADDED : மார் 30, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : உடல்நிலை சரியில்லாமல் இருந்த சிறுமி விளையாடும் போது மயங்கி விழுந்து இறந்தார்.
தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகள் சாரதி, 12. இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் தெருவில் விளையாடி போது, திடீரென மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள், அவரை அருகில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.