sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிக வட்டி தருவதாக மோசடி அரசு ஒப்பந்த ஊழியர் கைது

/

அதிக வட்டி தருவதாக மோசடி அரசு ஒப்பந்த ஊழியர் கைது

அதிக வட்டி தருவதாக மோசடி அரசு ஒப்பந்த ஊழியர் கைது

அதிக வட்டி தருவதாக மோசடி அரசு ஒப்பந்த ஊழியர் கைது


ADDED : நவ 24, 2024 04:55 AM

Google News

ADDED : நவ 24, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார், : அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணம் சுருட்டிய அரசு ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 41. இவர் புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறார். இவரது உறவினர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலை, பனமலைபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோபி, 38. இவர் பங்கு சந்தை நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி கொடுப்பதாக தெரிவித்து, ஒதியம்பட்டு பகுதியில் பலரிடம் ரூ. 1 லட்சம் டிபாசிட் செய்தால் மாதம் 8 ஆயிரம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி பலர் லட்சக் கணக்கில் ஜெயக்குமாரிடம் பணம் கொடுத்தனர்.

கொடுத்தவர்களுக்கு சில மாதங்கள் வரை வட்டி பணம் வந்தது. பின், வட்டி தரவில்லை. ஒதியம்பட்டு சீனுவாச கார்டனை சேர்ந்த உலகநாதன் மனைவி தீபா, 38, என்பவர் 51 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்ததால், வில்லியனுார் போலீசில் ஜெயக்குமார் மீது புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப் பதிந்து, ஜெயக்குமாரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோபியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us