
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : கொடாத்துார், அண்ணா வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 55; மூலக்குளத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர்.
கடந்த 16ம் தேதி வேலைக்கு சென்ற ஆறுமுகம் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் ஆறுமுகம் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலைவாணி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.