ADDED : ஏப் 27, 2025 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை, சோலை நகர் அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற பரிமாற்ற விழா நடந்தது.
தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வட்டம் ஒன்று பள்ளி துணை ஆய்வாளர் அனிதா சிறப்புரையாற்றினார். விழாவில் இரண்டு பள்ளி மாணவர்கள் இடையே நடனம், பாடல்கள், விளையாட்டு, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிரியை சுபத்திரா, புஷ்பலதா, ரேவதி, ராஜம், நிரஞ்சனா தேவி, ஜெயந்தி, ராஜப்பிரியா, அந்தோணி சாமி, சசிகலா, ருக்மணி, சோலை நகர் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

