/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திறன்மேம்பாட்டு பயிற்சி கவர்னர் துவக்கி வைப்பு
/
திறன்மேம்பாட்டு பயிற்சி கவர்னர் துவக்கி வைப்பு
ADDED : மார் 13, 2026 06:21 AM

நெட்டப்பாக்கம்: கிராமப்புற சுய உதவி குழு பெண்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, மின்சார ஆட்டோக்கள், லட்சாதிபதி பெண்களுக்கான சான்றிதழ் வழங்குதல், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கி வைத்தல், விவசாய களம் மற்றும் தானியக்கிடங்குகளை விவசாயிகளுக்கு அர்ப்பணித்தல் நிகழ்ச்சிகள் கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது.
புதுச்சேரி ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு திட்டங்களை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார், அரசு செயலர் கிருஷ்ணமோகன் உப்பு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் மாணிக்கத்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

