sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம்

/

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம்

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம்

மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம்


ADDED : ஜன 25, 2025 05:34 AM

Google News

ADDED : ஜன 25, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூனில் குடியரசு தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.

ஆணையர் எழில்ராஜன் செய்திக்குறிப்பு:

உள்ளாட்சித்துறை அறிவுறுத்தலின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயதுக்குட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (26ம் தேதி) காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை கிராம சபை கூட்டம் நடக்கிறது.

அதன்படி, திருவாண்டார்கோவில், சன்னியாசிக்குப்பம், மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் (மேற்கு), பி.எஸ்.பாளையம், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, சுத்துக்கேணி, மதகடிப்பட்டுபாளையம், திருபுவனை, கலிதீர்த்தாள்குப்பம் (கிழக்கு), மண்ணாடிப்பட்டு, மணலிப்பட்டு, கூனிச்சம்பட்டு, திருக்கனுார், கைக்கிலப்பட்டு, சந்தை புதுக்குப்பம், குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது.

இதில், பொதுமக்கள் பங்கேற்று கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை, கூட்டத்தில் முன்வைத்து தீர்மானமாக நிறைவேற்றலாம்.

அப்பணிகளை செய்ய தேவையான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு, நிதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us