ADDED : மார் 17, 2025 02:32 AM

அ நிறம் | அளவு
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.
கடந்த 11ம் தேதி துவங்கிய விழாவில், 14ம் தேதி சாகை வார்த்தல், இரவு கும்பம் படைத்தல் நடந்தது. நேற்று 16ம் தேதி காலை அபிேஷக, ஆராதனை மற்றும் மாலை மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், சந்தை புதுக்குப்பம் மற்றும் சுற்றிப்புற கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
