நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நாளை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.
அன்று இரவு கொடி கட்டுதல் நடக்கிறது. 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு அபிேஷக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 9ம் தேதி இரவு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சியும், மயானக் கொள்ளை 10ம் தேதி மதியம் 1.00 மணிக்கு நடக்கிறது.

