sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம்

/

அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம்

அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம்

அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம்


ADDED : ஆக 16, 2025 03:11 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கூட்டு தியானம் நிகழ்ச்சி நடந்தது.

சுதந்திரப்போராட்ட வீரரும், ஆன்மிக வாதியுமான மகான் அரவிந்தரின் 153வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவர் தோற்றுவித்த அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6:00 மணிக்கு ஆசிரமவாசிகளின் கூட்டு தியானம் நடந்தது.

அதேபோல், ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர் அறை பொது தரிசனத்திற்கு திறந்து விடப்பட்டது. இதில் பக்தர்கள், ஆசிரமவாசிகள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி வைசியாள் வீதியில் அரவிந்தர் முதல் முதலாக புதுச்சேரி வந்து தங்கிய வீட்டில் உள்ள அறையையும் பக்தர்கள் தரிசனர் செய்தனர்.

அரவிந்தர் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் ஆம்பி தி யேட்டரில் அதிகாலை 4:45 முதல் 6.30 மணி வரை போன்பயர் நிகழ்ச்சிக்கு மூட்டப்பட்ட தீயை சுற்றி அமர்ந்து தியானம் செய்தனர்.






      Dinamalar
      Follow us